அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, September 02, 2007

அசுரனிடம் கேளுங்கள்!

1. இந்த உலகிலேயே மிக அன்பானவர் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?- சதீஷ், நாகர்கோவில்இப்போதைய நிலைவில் அதற்கென ஒரு போட்டி வைத்தால் அதில் வெற்றி பெறுபவர் நிச்சயமாக சிறீலங்கா அதிபர் இராஜபக்ஷேவாகத்தான் இருப்பார். திகைக்காதீர்கள்! சிறீலங்காவில் தெருவில் திரியும் நாய்களைக் கொல்லக்கூடாது என்று ஆணையிட்டுள்ளார். என்ன அன்பு பார்த்தீர்களா? (என்ன, நாயினுங் கேடான தமிழர் நிலையை மட்டும் மறந்துவிடுங்கள்).
2. ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க ஒரு தொழிற்சாலை அமைப்பது தவறா?- ஆசாத், குளச்சல்.தாத்தாவும் பாட்டாவும் ஒப்பந்தம் போட்ட டைட்டானியம் ஆலை பற்றித்தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். 'பிக்பாக்கட்' திருடனை சமாளிக்க சம்பல் கொள்ளையனை அழைத்து வருவது எப்படி சரி? ஆயிரம் பேருக்கு வேலை சரி: 20,000 பேருக்கு வாழ்வு பறிபோகிறதே?
3. டாக்டர்கள் கூட பயங்கரவாதிகளாக ஆகிவிட்டார்களே?- ராம், நெல்லை.நீங்களும் அந்த மாயையில்தான் இருக்கிறீர்களா?'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். இப்போது, அது அமெரிக்காவுக்கும் மிகப்பொருந்தும். முன்பெல்லாம் யாரையாவது கைது செய்யவேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் என்பார்கள். இப்போது யாரேனும் ஒருவர் இசுலாமியராகவோ, கறுப்பு அல்லது பழுப்பராகவோ இருந்தாலே போதும் என்றாகிவிட்டது.மருத்துவர் கையில் ஊசியை எடுக்கவேண்டுமா அல்லது துப்பாக்கியை தூக்கவேண்டுமா என்பதை சமூகச் சூழல்தான் தீர்மானிக்கிறது.'தன்வினை தன்னைச் சுடும்' என்பதை அமெரிக்கா மறக்கக்கூடாது.
4. என்னங்க 'சிவாஜி' ய பற்றி நீங்க எதுவுமே எழுதலியே?- ஆல்பர்ட், கோவை.அதைப்பற்றியும் எழுத வேண்டியதாகிவிட்டதா? நான் தப்பிவிட்டதாக அல்லவா நினைத்தேன். கறுப்புப்பணத்தை தேடி சிவாஜி தொடர்புடையவர்களின் வீடுகளில் ரசிக மகா ஜனங்கள் புகுந்துவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று கொஞ்சம்கூட முன்யோசனை இல்லாமல் எப்படி இப்படியொரு படத்தை எடுத்தார்களோ?
5. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னும் பொதுப்பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போர் குறைந்து வருகிறார்களே?- சங்கர், விழுப்புரம்.ஆகஸ்ட் 15 - க்கு மிட்டாய் வேணும்ணா நேரடியா கேளுங்க. அத உட்டுப்புட்டு...?!ஆமா, மக்களுக்காக கொடுக்கப்படும் குரல்களுக்கும் மக்கள் குரல்களுக்கும் இங்கு என்ன மதிப்பு இருக்கிறது?சென்னையில் மருத்துவமனை கட்ட கோரி சுவரெழுத்து பிரச்சாரம் செய்த மக்கள் எழுச்சி இயக்கத்தோழர் நேயனுக்கு கிடைத்தது கைதும் 2 நாள் சிறைவாசமும்.ஆண்டிப்பட்டிக்கு அருகே போதிய ஆசிரியர்கள் வேண்டும் என்று போராடிய பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது போலீசின் தடியடி. 10 மாணவர்கள் தேனி மருத்துவமனையில் அனுமதி. கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராகவும் சேதுசமுத்திரம் திட்டத்திற்கு எதிராகவும் பல்லாயிரம் பேர் திரண்டும் பலனில்லை. நீங்கள் கேட்பது என்னடாவென்றால்...

போலியோ ஒழிப்பு: தோல்வி காத்திருக்கிறது!

குழந்தை என்று யாராவது பெயர் வைத்திருந்தால் கூட வீட்டிற்கே ஆளனுப்பி, தூக்கிச்சென்று, வாயில் போலியோ சொட்டு மருந்தை ஊற்றிவிட்டுத்தான் அனுப்புவார்கள் என்றளவில் தீவிர போலியோ ஒழிப்பு திட்டம் தீவிரமாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அட... போய்யா என்று கூறி, இந்தியாவை காலாற சுற்றி நடந்துபார்க்கத் தொடங்கிவிட்டது போலியோ எனும் இளம்பிள்ளைவாதம்.கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 601 போலியோ நோயாளிகள் ஆதாரபூர்வமாக சிகிட்சைக்கு வந்திருக்கின்றனர். (பரம்பரை மருத்துவர்களிடம் மருத்துவம் பெற்றோர் எண்ணிக்கை இதில் வராது என்பது நிச்சயம்). இந்த ஆண்டு இதுவரை 60 பேர் கண்டறியப்பட்டுள்ளனராம். அதில் பெரும்பாலானவை வடமாநிலங்களே.இதனால், மிரண்டுபோன உலக சுகாதார நிறுவனம் 'இந்தியா செல்வோர் பார்வைக்கு' என்று எச்சரிக்கை குறிப்பை வேறு அனுப்பிவைக்க, பொங்கி எழுந்தது. நமது மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சகம். இந்தியாவிலுள்ள 30 கோடி குழந்தைகளுக்கும் போலியோதடுப்பு மருந்து அளிக்கப்போகிறோம் என்று தோள்தட்டி களத்தில் இறங்கிவிட்டார். மத்திய அமைச்சர் மருத்துவர் இரா. அன்புமணி.1300 கோடி ரூபாய் மதிப்பிலான போலியோ ஒழிப்புத்திட்டமானது பிற 9 நோய்தடுப்புத் திட்டங்களுக்கு ஈடான தொகையை விழுங்குகிறது. முன்பு சர்வதேச உதவியாக 90% கிடைத்தது. இப்போதோ நாமேதான் முழுவதும் செலவு செய்தாகவேண்டும்.இந்நிலையில், தி இந்து நாளிதழில் மருத்துவர் ஜேக்கப் எம். புலியல் தெரிவித்துள்ள கட்டுரைகள் நம் கண்களைத் திறப்பதாக உள்ளன. "தேசிய போலியோ ஒழிப்புத் திட்டமானது திட்டமிட்டபடி வேலை செய்யவில்லை. தொடர்ந்து போலியோ சொட்டுமருந்து அளிப்பது என்ற 'மேஜிக் புல்லட்' திட்டம் தோல்வியடைந்துவிட்டது. போலியோ என்பது நீர், சுகாதாரச் சிக்கல் தொடர்பானது" என்கிறார் அவர்.தற்போது தேசிய அறிவு ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் மருத்துவர் புஷ்பா பார்கவா 1999 டிசம்பரில் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்று."1998 -ல் போலியோ தடுப்பு கருத்தரங்கில் சொட்டு மருந்திற்குப் பதிலாக ஊசி மருந்து பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கூர்கானில் ஒரு தடுப்பூசி ஆலை நிறுவவும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 1992-ல் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி அத்திட்டம் கைவிடப்பட்டு சொட்டுமருந்து அளிக்க தீர்மானிக்கப்பட்டது.அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு சொட்டு மருந்தானது இந்தியாவுக்கு பொருந்தாது என்றும் அதனால் நமது பணமும் உழைப்பும் தான் வீணாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலில்லை.இந்திய மருத்துவக் கழக (ஐ.எம்.ஏ) துணைக்குழு அறிக்கையில் தடுப்புமருந்தால் தூண்டப்படும் போலியோவானது கடந்த ஆண்டு மட்டும் 1600 என பதிவாகி உள்ளது. ஆனாலும், தொடர்ந்து சொட்டுமருந்து அளிக்கப்பட்டதால் 27,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போலியோ போன்ற பக்கவாத தாக்கம், போலியோ தடுப்புமருந்தால் உருவாகும் போலியோ பாதிப்பு என்பனவெல்லாம் போலியோ சொட்டுமருந்து திறனற்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.1988ல் 24,000 போலியோ நோயாளிகளே பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது 1994ல் 4800 ஆகக் குறைந்தது. 1998ல் உலக சுகாதார நிறுவனம், சுழற் சங்கம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் உதவியால், தொடக்கத்தில் ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் உதவியுடன் தொடர் தீவிர போலியோ சொட்டுமருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2 ஆண்டுகளின் பின்னர் 'உதவியாளர்கள்' விலகிக்கொள்ள இத்திட்டத்தை அரசே மேற்கொள்ள வேண்டியதாயிற்று. செலவு என்ன தெரியுமா? 1000 கோடி. ஆக, வெளி 'உதவி' என்பது அரசின் கண்களைக் கட்டி கடன் வலையில் விழவைப்பதேயாகும். இதனால் அரசு முட்டாளாக்கப்பட்டது. நாம் நமது தவறுகளிலிருந்து இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.போலியோ சொட்டுமருந்து தோல்வி அடைந்துவிட்டது. எனவே, அதிக பாதிப்புள்ள பகுதியில் இலவச போலியோ தடுப்பூசி போடுவது என்று இப்போது முடிவெடுக்கப்படுகிறது.இந்த 'இலவச' தடுப்பூசியையும் தொடக்கத்தில் வேண்டுமானால் அவர்கள் இலவசமாக தரலாம். அதன்பின்...? பழைய கதைதான். இந்த இறக்குமதி செய்யப்படும் ஊசி மருந்தானது சொட்டு மருந்தைவிட 25 மடங்கு விலை அதிகம். இதனாலும் 100% போலியோ ஒழிக்கப்பட்டு விடுமா என்றால் முடியாது என்கிறார் அவர்.ஆக, இன்னுமொரு தோல்வி காத்திருக்கிறது. மாசுபட்ட குடிநீர், சுகாதாரமின்மை போன்றவற்றால் பரவும் வைரஸ் நோயான போலியோவை வெற்றிகரமாக கையாளவேண்டுமானால் வழக்கமான தடுப்பு மருந்துகளோடு, மக்களுக்கு தூய குடிநீரும், நல்ல சுகாதாரமான சுற்றுச்சூழலையும் ஏற்படுத்தித் தருவதே நிரந்தரத்தீர்வு என்ற இந்திய மருத்துவகழக துணைக்குழு அறிக்கையை ஏற்றால் பிழைத்தோம்.இல்லையென்றால்...நாடு கடன்சுமையில் தள்ளப்படுவதோடு, கூடுதல் போலியோ நோயாளிகளை உருவாக்கிய பெருமையும் நம்மைச்சேரும்.

நக்சலைட்டுகளை ஒழிக்க முடியுமா?



மேற்குவங்கத்தின் நக்சல்பாரி என்ற ஊரில் தொடங்கிய உழவர்களின் எழுச்சி என்பதால், அந்த ஊரின் பெயரால், அதைப் பின்பற்றும் இயக்கத்தினர் தமிழில் நக்சல்பாரிகள் என்றும், ஆங்கிலத்தில் நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் எண்பதுகள் வரையிலும் இவர்கள் தீ கம்யூனிஸ்ட்டுகள் (தீவிர கம்யூனிஸ்ட் என்பதின் சுருக்கமாம்) என்றே செய்தி களில் குறிப்பிடப்பட்டனர். தீ கம்யூனிஸ்ட்டுகள் அட்டூழியம் என்ற செய்திகளைப் படித்தால் பொதுவாக அதன் பின்னணியில் கந்துவட்டி கொள்ளைகும்பல்கள் அல்லது கொடூரமான நிலபிரபுக்களுக்கெதிரான ஏதாவது ஒரு நடவடிக்கை செய்தியாகியிருக்கும். தொண்ணூறுகளில் ஆந்திராவில் மக்கள் போர்க்குழுவின் நடவடிக்கைகள் பரபரப்பான செய்திகளாக ஆயின. அதன் பின், பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் அதிரடியாக செயல்படத் தொடங்கியது. (இப்போது இந்த இரு அமைப்புகளும் இணைந்து இந்திய பொதுவுடைமை கட்சி - மாவோயிஸ்ட் என்று புதிய பெயரிட்டும் களத்தில் இறங்கியுள்ளனர்). தற்போது சட்டீஸ்கர், ஜார்கண்ட் முதலான பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் 45, 50 என்று போலீசாரை கொன்றுகுவித்து செய்திகளில் இடம்பெறுகின்றனர். பொதுவாக இந்திய ஆளும் வர்க்கமும், போலீசும் இப்பிரச்சி னைகளை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளாகவே பார்க்கின்றனர். "படித்தவர்கள்" கூட இதனை சமூக பொருளா தார பிரச்சினையாகப் பார்க் காமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே பார்க்கின் றனர் என்பது வேதனைக் குரியது. தற்போது தமிழகத்தில் நக்சலைட் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ள உயர் போலீஸ் அதிகாரியான விஜயகுமாரின் பேட்டிகளே இதற்குச்சான்று. தற்போதைய "பரபரப்பான சட்டீஸ்கரின்" நிலைமையை பார்ப்போம். சில மாதங்களுக்கு முன்புவரை பலருக்கும் தெரியாத சட்டீஸ்கர் என்ற பெயர் நக்சல்பாரிகளின் போராட்டம் காரணமாக தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடத் தொடங்கியுள்ளது. அண்மையில் இப்பிரச்சினை குறித்து வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டீஸ்கர் சட்டமன்றம் கூட்டப்பட்டுள்ள செய்தியானது அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளது. மிகுந்த இயற்கைவளமும், கனிம வளமும் பெற்றுள்ள சட்டீஸ்கரில் தற்போது மேற்கொள்ளப்படும் தொழில்மய நடவடிக்கைகளால் மக்களிடமிருந்து நிலத்தைப் பறிக்கும்போக்கு உருவாகியுள்ளது. இதற்கு எதிரான நக்சல்பாரிகளின் நடவடிக்கைகளும், தன்னால் நக்சல்பாரிகளை சமாளிக்க இயலாத நிலையில் சல்வார் ஜுடும் என்ற அதிகாரப்பூர்வ கூலிப்படையை அரசு பயன்படுத்துவதும் இங்கு ரத்தக்களரியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வன்முறைகளால் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். டந்தேவாடாவில் உள்ள ஏர்ராபோர் நிவாரண முகாமிற்கு அருகில் துப்பாக்கி ஏந்தியபடி நின்றுகொண்டிருக்கும் ரமேசுக்கு அவருடைய வயதுகூட சரியாகத் தெரியவில்லை. 16 இருக்கலாம். அவருக்கு தேர்தலில் வாக்களிக்கவோ, திருமணம் செய்துகொள்ளவோ இந்த வயதில் உரிமை இல்லை. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சட்டீஸ்கரில் நக்சல்பாரிகளை வேட்டையாடுவதற்காக சிறப்புப் போலீஸ் அதிகாரி என்ற தகுதியில் கையில் துப்பாக்கி, ஒருவாரப் பயிற்சியுடன் 1500 ரூபாய் மாத ஊதியத்தில் இவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் கவிஞரான காசி ஆனந்தன் ஆயுதப்போராட்டம் பற்றி எழுதும்போது "தாயை நேசிக்க மீசை தேவையில்லை" என்றார். இது போராளிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். போலீசுக்கு எப்படிப் பொருந்தும்? அரசு ஒருபுறம் இவ்வாறு முயற்சி செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ - வான மகேந்திர கர்மா வேறொரு முயற்சியை செய்தார். அது தான் சல்வார் ஜுடும். நக்சல்பாரிகள் பழங்குடியினருக்காக போராடும் அதேவேளையில் மற்றொரு பழங்குடியான இந்த எம்.எல்.ஏ முதலமைச்சர் இராமன்சிங், பெருமுதலாளிகளின் ஆதரவுடன் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். இதிலுள்ள பெரும்பாலானோர் ரமேஷைப் போல பதினாறு வயதிற்குட்பட்டவர்களே. பின்னர் போலீஸ் துறையில் நிரந்தர வேலை தரப்படும் என்ற வாக்குறுதியுடன் இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலான சல்வார் ஜுடும் தலைவர்கள், பழங்குடியினர் அல்லாதோர்கள் அல்லது பணக்கார பழங்குடியினரே. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், தனிப்பட்ட பார்வையாளர்களும் சல்வார் ஜுடும் மூலம் அரசால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக "சல்வார் ஜுடும் கூட்டம் நடத்தப்படும்போது மிகுந்த போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது. மக்கள் மிரட்டி அழைத்துவரப்படுகின்றனர். வராதவர்கள் சல்வா ஜுடும் குண்டர்களாலும், போலீசாலும், நாகா துணை இராணுவப்படையாலும் துன்புறுத்தப்படுகின்றனர்" என்கிறது மக்கள் குடியுரிமை கழக அறிக்கை ஒன்று. பெண்களை தாக்குவது பாலியல் வன்முறைகள் செய்வது, வீடுகளை எரிப்பது போன்ற குற்ற நடவடிக்கைகளில் இக்குண்டர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் மாவோயிஸ்ட்டுகளோ தம் எதிரிகளை தீர்த்துக்கட்டுவதாக மட்டுமே தெரியவருகிறது. உண்மையை வெளியிட்டால் நக்சல் ஆதரவாளன் என்று முத்திரைக் குத்தப்படுவதால் உள்ளூர் பத்திரிகையாளர்கள் அஞ்சுகின்றனர். கனிமவளம் மிக்க இந்தமண்ணிலிருந்து மக்களையும் கிராமங்களையும் அப்புறப்படுத்திவிட்டு, நிலத்தை பெருமுதலாளிகளுக்கு கையளிப்பதற்காகவே மக்கள் மீது வன்முறை ஏவப்படுவதாக தெரிகிறது. ஜுன் 2005ல் மேற்கொள்ளப்பட்ட நக்சல்பாரிகள் எதிர்ப்பு போலீஸ் நடவடிக்கையின்போது 350 உயிர்கள் பலியானதுடன் 700 பழங்குடி கிராமங்கள் காலிசெய்யப்பட்டது இதை உறுதி செய்கிறது. இதனால் பல்லாயிரம் பழங்குடியினர் ஆந்திரா, ஒரிசா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். 1966 - ல் மிசோ தேசிய முன்னணி கொரில்லாக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளால் இவ்வாறு தம் ஊரைவிட்டு துரத்தப்பட்ட மக்களில், இளைஞர்கள் அக்கொரில்லாக் குழுவில் பெருமளவில் இணைந்ததே வரலாறு. மிசோ சமூக கட்டமைப்பு குலைக்கப்பட்டதால், அவர்கள் இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டார்கள். டந்தேவாடா மாவட்டத்திலுள்ள துருள்ளி கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கிராமசபா கூட்டம் எஸ்ஸார் குழுமத்தின் இரும்பு எஃகு ஆலைக்காக 600 எக்டேர் நிலம் எடுப்பதற்கு நடத்தப்பட்டது. மக்கள் எதிர்ப்பால் முதல்கூட்டம் தோல்வியில் முடிய, மற்றொரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சிலரின் விரல் ரேகைகள் மிரட்டிப் பெறப்பட்டன. இது எங்கோ ஓரிடத்தில் நடந்தது அல்ல. சட்டீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்திலுள்ள லோகண்டிக்குடா வட்டத்தில் டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைப்பதற்காக முப்போகமும் விளையக்கூடிய, வளமான 2169 ஹெக்டேர் வேளாண் நிலத்தை பிடுங்கி 10 , கிராமங்களை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட கிராமசபா கூட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் மூலம் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டது. இவ்வாறு நிலத்திலிருந்து பழங்குடி மக்களை அந்நியப்படுத்துவது என்பது இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் மீது ஏவப்படும் மிகக்கொடிய அடக்குமுறையாகும். சட்டீஸ்கரில் நக்சல்பாரிகள் ஏன் வலுவாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே போதுமான பதிலாகும். அணைகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றிற்காக பலநூறாண்டுகளாக தாம் வாழ்ந்து வந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு இழப்பீடோ, வேலைவாய்ப்போ வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களின் பண்பாடும், பாரம்பரியமும் அழிக்கப்படுகிறது. மக்கள்நலனை கருதாமல் முன்னெடுக்கப்படும் இந்த வகையான பொருளாதார நடவடிக்கைகள், சமூக கொடுமைகள் நீடிக்கும் வரை நக்சலைட்டுகளை ஒழிக்கமுடியாது என்பதே உண்மை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மக்களுக்கான அரசாக மாறுவது ஒன்றே இதற்குத் தீர்வு.

Sunday, June 17, 2007

அணுவுக்கு உலையா? வாழ்வுக்கு உலையா?

அணு என்றாலே இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சும் அதனால் மக்கள் அடைந்த துயரங்களும் நம் கண்முன் தோன்றுகின்றன. அந்த கொடூரத்தை யாரால் மறக்க முடியும்?.அதுபோல அணுஉலை விபத்து என்றாலே உலகைக் குலுக்கிய சோவியத் ரஷியாவின் செர்னோபில் அணுஉலை விபத்துதான் நெஞ்சில் நிழலாடுகிறது. இதனால் இன்றுவரையிலும் தோல்புற்று நோய், இரத்தப் புற்று நோய் உட்பட வகைவகையான நோய்களால் இலட்சக்கணக்கானோர் உயிர் இழந்து உள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு புதிய இடங்களில் துன்புற்று வாழ்கின்றனர். 1986
ஏப்ரல் 29 ஆம் நாள் நடைபெற்ற செர்னோபில் அணுஉலை வெடிப்பால் சோவியத் ஒன்றியம் மட்டும் அல்லாது முழு ஐரோப்பாவுமே பாதிக்கப்பட்டது. ஆபத்தில் தத்தளித்த சோவியத் ஒன்றியத்திற்கு நட்பு நாடாக இருந்த இந்தியா அப்போது சுமார் 17,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. செர்னோபில் விபத்து நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி கதிர்வீச்சின் பாதிப்பு குறித்த உண்மைகள் மிகத் தீவிரமாக வெளிப்பட்டு கொண்டு இருந்த ஒரு கொடூரமான நேரத்திலேயே 1988 நவம்பர் 20 - இல் இராஜிவ்காந்திக்கும் கோர்பசேவுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதுதான் வேதனை. இதன்படி 1000 மெகாவாட் திறனுடைய இரு அணுஉலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.அணுகதிர் வீச்சு குறித்த ஆபத்தான விளைவுகளை நன்கு அறிந்து இருந்த மக்கள் இதற்கு எதிராக கொதித்து எழுந்தனர். சேவை அமைப்புகள், மாணவர் அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாயிகள், அறிவுஜீவிகள், சில அரசியல் கட்சிகள் போன்றவர்களின் அமோக ஆதரவுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் எங்கும் பற்றிப் படர்ந்தது. குறிப்பாக அப்போதைய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினராகிய திரு. வைகோ நாடாளுமன்றத்திலேயே பிரதமர் இராஜிவ்காந்தியிடம் நேருக்குநேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தகைய கடுமையான எதிர்ப்பின் விளைவாக இராஜிவ் காந்தியின் அப்போதைய தமிழகச்சுற்றுப் பயணத்தில் திட்டமிடப்பட்டிருந்த கூடங்குள அணுமின் நிலைய அடிக்கல்நாட்டு விழா அரசால் கைவிடப்பட்டது, 90களில் சோவித் ஒன்றியம் உடைந்து சிதறியதால் இத்திட்டம் கனவாகவே இருந்தது.
என்றாலும் 1997 இல் இந்திய பிரதமராய் இருந்த தேவகெளடா புதிய இரசிய அதிபரான புதினுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இத்திட்டம் மீண்டும் உயிரூட்டப்பட்டது. 2001 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராய் இருந்த வாஜ்பாய் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் செய்து தன்பங்குக்கு திட்டத்தை உறுதிபடுத்திக் கொண்டார். அதன் பின்னர்தான் திட்டம் வேகம் பிடித்தது. கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 1994 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு மாறாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுவது தான். அச்சட்டப்படி 50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட எந்த ஒரு திட்டமும் உரிய சுற்றுச்சூழல் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் சாதக, பாதக அம்சங்கள் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுதான் நிறைவேற்றப்பட வேண்டும்.கூடங்குளம் அணுஉலை 1988 இல் திட்டமிடப்பட்டாலும் அதற்கும் தற்போது நடைமுறை படுத்தப்படுகின்ற திட்டத்திற்கும் தொடர்பே இல்லை. இரண்டும் வெவ்வேறான அம்சங்களைக் கொண்டவை. பழைய ஒப்பந்தப்படி அணுஉலைக்கு குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளப்படும், ஆனால் இப்போது செயல் படுத்தப்படுவது எப்படி என்றால் உலைக்கு தேவையான நீர் முழுவதும் கடல்நீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு சுத்திகரிப்பு ஆலை அமைக்க டாட்டா நிறுவனத்துடன் 116 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. (சட்டப்படி இதற்கே மக்கள் கருத்தாய்வு நடத்தப்பட வேண்டும்). முதல் ஒப்பந்தப்படி அணுஉலையில் இருந்து வரும் கழிவுகளை சோவியத் ஒன்றியமே எடுத்துக் கொள்ளும், ஆனால் இப்போதைய நிலவரப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அந்த கதிர்இயக்க கழிவுகளை நாம்தான் கட்டியாள வேண்டும். முதல் ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர் நெல்லை மாவட்டங்களின் பல இடங்களில் உருகிய பாறைக்குழம்புகள் மேலே வந்ததன, நிலநடுக்கமும் ஏற்பட்டது போன்ற அனுபவங்களும் உள்ளன.
ஆனால் இவற்றையேல்லாம் மூடி மறைத்துவிட்டு மோசடித்தனமாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டும் முனைப்பு காட்டுகிறது நம் அணுமின் உலை கூட்டம். இவ்வாறு திருட்டு தனமாக இரு அணுஉலைகளைக் கட்டிக்கொண்டு இருக்கும் அதே வேளையில் தீராத தாகத்துடன் இனியும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நினைப்பில் இந்த வளாகத்திலேயே மேலும் நான்கு அணுஉலைகளை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக கடந்த குடியரசு தின விழாவின் போது இந்தியாவுக்கு வந்த இரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.இப்புதிய ஒப்பந்தப்படி அணுஉலைகளை அமைப்பதற்காக மக்கள் கருத்தைக் கேட்டுநிற்கிறது அணுமின் துறை. இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை படித்த பாதுகாப்பான சுற்றுசூழலுக்கான மருத்துவர்கள் குழுவை சார்ந்த டாக்டர். ரமேஷ் தெரிவிக்கும் தகவல்கள் நம் விஞ்ஞானிகளின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன. இந்த அறிக்கையில் அணுஉலையில் இருந்து எவ்வளவு கழிவு வெளியேறும், அந்த கதிர் இயக்க கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்று கூட சொல்லவில்லை. இத்தகைய அடிப்படை விஷயங்களைக் கூட தெரிவிக்காத இவர்கள் நாளிதழ்களில் முழுபக்க வண்ண விளம்பரங்களை வெளியிட்டு ஆதரவு திரட்டுகிறார்கள். அவற்றின் உண்மை நிலையை பார்ப்போம்.
மிகத் தொலை நோக்கு பார்வையில் பார்க்கும் போது 35 அல்லது 40 ஆண்டுகள் மின்சாரம் கிடைக்கும் என்பதற்காக உலகிற்கே ஆபத்தான கதிரியக்கக் கழிவை பல்லாயிரம் ஆண்டுகள் மடியில் கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? நியாமாகப் பார்த்தால் ஆபத்தான அணுஉலைகளில் செய்யும் மூதலீட்டை காற்றாலைகளில் செய்தாலே பாதுகாப்பாக மின்சாரம் தயாரிக்க முடியும்.நமது குடியரசு தலைவர் எதிர்காலத்தை பற்றிதான் கனவு காணச் சொன்னாரே தவிர பகல்கனவு காணச் சொல்லவில்லை. 2032 ஆம் ஆண்டு அணுசக்தி மூலம் 63000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆசைப்படுகிறது அணுசக்தி துறை. 87 ஆம் ஆண்டுக்குள் 25000 மெகாவாட் 2000த்தில் 45000 மெகாவாட் என்று கனவு கண்ட நம் அணுசக்திதுறை பல்லாயிரம் கோடி ரூபாய்க்களை விழுங்கி விட்டு இன்று வரையிலும் 3310 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்திச் செய்கின்றது.
முதலில் அமைக்கப்படும் இரு அணுஉலைகளுக்கு கடும்எதிர்ப்பு இருந்து வரும் போதும் மேலும் நான்கு உலைகளுக்கு தேவையான தண்ணீரை கடல்நீரை சுத்திகரித்து எடுக்கிறார்கள். இந்த சுத்திகரிப்பு கழிவுநீரையும் கடலில்தான் விடப்போகிறார்கள். இதில் பயன்படுத்தப்படும் குளோரின் போன்ற வேதிப் பொருட்களால் அவ்வட்டாரம் கடல்மீன்கள் வாழத்தகுதி அற்றதாக மாற்றப்படும்.இன்று தமிழகத்தின் மின் தேவை அதிக பட்சம் 8000 மெகாவாட்தான். ஆனால் இப்போது உற்பத்தி ஆவது 10100 மெகாவாட் மின்சாரம் ஆகும். அப்படி இருக்கும் போது ஆபத்தான அணுஉலைகள் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ - 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தி துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுபாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்களே. இதுதான் இவர்கள் பெருமைப்பட்டு கொள்ளும் கான்கிரீட்டின் தரம்.
கதீர்விச்சு மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று இவர்கள் சொல்வதை எப்படி நம்புவது. உலகு எங்கும் செய்யப்படும் ஆய்வுகளால் அணுஉலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவிற்குள் வாழுகின்ற மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கம் அணுஉலைகளின் அருகிலும் கூட ஆறு விரல்களுடன் குழந்தை பிறப்பது மிகக் கொடூரமான மல்டிபிள்மைலோமா எனப்படும் கதிரியக்க புற்று நோய் போன்றவை ஏற்பட்டுள்ளதை டாக்டர். புகழேந்தி வெளிப்படுத்தி உள்ளார்.இவை எல்லாவற்றையும் விட வேதனை என்னவென்றால் 460 மெகாவாட் திறனுடைய கல்பாக்கம் அணுஉலையிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் அப்பகுதியின் கடல் 10 டிகிரிக்கு மேல் சூடாகும் நிலையில் இங்கு அமைக்கப்படும் 6000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் உலைகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் மட்டும் கடலை 7 டிகிரி மட்டும் தான் சூடாக்கும் என்று கதை சொல்லுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக ஜப்பானில் கஷிவசாகி கரிவா என்ற இடத்தில் டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ள உலையை நமக்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள் கூடங்குளம் அணுவிஞ்ஞானிகள்.1985 ஆம் ஆண்டு முதல் அங்கு இயங்கிய ஏழு உலைகளால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறது அணுசக்தி துறை. உண்மையில் அங்கு 1990 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பல சிறிய. பெரிய விபத்துகள் நடந்துள்ளன. அவற்றை நிர்வாகம் மறைத்து வந்துள்ளது. மைய உலைகலன்களில் ஏற்பட்டு இருந்த பல சிறிய, பெரிய கீறல்கள் தண்ணீர் குழாயில் இருந்த வெடிப்புகள் வெளியே சொல்லாமல் மறைக்கப்பட்டுள்ளன. இதனை சரிசெய்ய எடுத்த வீடியோவை கூட திருத்தம் செய்தே அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த உண்மைகளை எல்லாம் அந்நிறுவனப் பணியாளர் ஒருவர் வெளியே சொல்ல பெரும் போராட்டம் வெடித்தது. மக்களின் கொந்தளிப்பை தாங்க இயலாமல் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து அணுஉலைகளும் இழுத்து மூடப்பட்டன. அப்பகுதிக்கு வந்த ஜப்பான் நிதியமைச்சர் அங்கு கூடியிருந்த வட்டார மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்நிறுவனத் தலைவரும் மக்கள் முன் தரையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஜப்பானைப் பொறுத்தளவில் இவ்வாறு மன்னிப்பு கேட்பது உச்சப்பட்ச இழிவான தண்டனையாகக் கருதப்படுகிறது. இந்த உலையை உதாரணமாக சொல்லிக் கொண்டிருக்கிற நம் விஞ்ஞானிகளும் இப்படிதான் எதிர்காலத்தில் மன்னிப்பு கேட்பார்களோ?நம் நாட்டுத் தலைவர்கள் தான் கூடங்குள அணுஉலை விசயத்தில் அமைதியாக இருக்கிறார்களே தவிர பிறர் அப்படி இல்லை. உதாராணமாக ஆஸ்திரிய வெளியுறவுத் துறை அமைச்சர் எழுப்பி உள்ள கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மின்சாரம் தயாரிக்க ஏராளமான மாற்றுவளங்கள் இந்தியாவில் உள்ள நிலையில் கூடங்குளத்தில் ஏன் அணுஉலை அமைக்க வேண்டும் என்று அந்த அம்மையார் எழுப்புகின்ற கேள்வி நம்மவர்களின் செவிகளை எட்டுமா? இனி அமைக்கப்பட இருக்கின்ற உலைகள் எல்லாம் வெளிநாட்டு யுரேனியத்தை நம்பியே தொடங்கப்பட இருக்கின்றன.
கூடங்குளத்தில் ஏற்கனவே கட்டப்படும் இரு உலைகளுக்கும் கூட ரசிய யுரேனியம்தான். இத்தகையச்சூழலில் அணுசக்தியில் இந்தியா தீவிர ஆய்வுக்கு முனைந்தால் இவர்களெல்லாம் யுரேனியத்தை தர மறுக்கும் சூழல் நிலவுகிறது. ஆக பழைய அணுஉலைக்கு ரசிய அடிமையாகவும் புதிய அணுஉலைகளுக்கு அமெரிக்கா அடிமையாகவும் மொத்தத்தில் இந்திய அரசு அடிமைத்தனத்துடன் குடியிருக்கும் நிலை ஏற்படும்.நீண்ட நாள் நட்பு நாடாகிய ஈரானை இக்கட்டான நேரத்தில் கைகழுவிய ரசியா நம் உதவிக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. நிலைமை இப்படி இருக்கும் போது எப்படியாவது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று தமிழக அரசு மூர்க்கமாக களமிறங்குவது தமிழக மக்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பானது என்கிற அச்சமே நம்மை வாட்டுகிறது.எதிர்பாராமல் ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டால் உலையிலிருந்து 70 கி.மீ வரையிலான மக்கள் நிரந்தரமாக நம் வாழிடத்தைவிட்டு வெளியேற்றப்படும் சூழலில் பழந்தமிழரின் தாயகமான குமரி கண்டத்தையும் இன்னுயிரை ஈந்து பெற்று பாதுகாத்தப் பகுதிகளையும் பற்றிய நினைவுகளுடன் நிரந்தர அகதிகளாக தென் மாவட்ட மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். 133 அடி உயரத்தில் வானளாவ நிற்கும் தமிழர்களின் அறிவாசான் திருவள்ளுவர் ஆளரவம் இன்றி அநாதையாய் நிற்கும் காட்சியை எண்ணி கலங்கப் போகிறோமா?

தக்காளி சைவமா? அசைவமா?

இந்தியாவானது இங்கிலாந்தின் நேரடி கட்டுப்பாட்டின் காலனி அடிமை நாடாக இருந்த போது ஒருமுறை வெள்ளையர் படையிலிருந்த இந்திய வீரர்கள் கடுமையான கலவரத்தில் ஈடுபட்டனர். அதற்கு காரணம் என்ன தெரியுமா!
படைவீரர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளில் உராய்வு எண்ணெயாக பன்றிக்கொழுப்பும், பசுக்கொழுப்பும் பயன்படுத்த அளிக்கப்பட்டதாக சொல்லப்பட் டது தான். பன்றிக்கொழுப்பை பயன்படுத்துவதற்கு எதிராக இஸ்லாமிய வீரர்களும், பசுக் கொழுப்பை பயன்படுத்துவதற்கு எதிராக இந்து வீரர்களும் மிக பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் இப்போதோ நம்மு டைய அனுமதியின்றியே நமது சைவ உணவுகளை ளெல்லாம் இனி அப்படி சொல்ல முடியாத வகையில் மரபீனி மாற்றம் செய்யப்படுகின்றன.
பருத்தியில் மட்டும் 40-வகை யானவை உருவாக்கப்பட்டுள்ளன. நம் அன்றாட உணவான நெல்லில் கூட பூச்சிகளை எதிர்ப்பவை, வைட்டமின் எ சத்துடையவை, உப்பு நீரிலே விளையகூடியவை என்று பல்வேறு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது சமையலறையில் இடம்பிடித்துள்ள தக்காளியும், கத்தரிகாயும் கூட இவர்களின் தொழில்நுட்ப வெறிக்கு தப்பவில்லை.
இவர்களின் மரபீனிப் பொறியியல் தொழில் நுட்பத்தை எதிர்பாராதது, சரிசெய்ய இயலாது, இயற்கைக்கு மாறானது என்ற 3 சொற்களில் கூறிவிடலாம்.
ஒரு தாவரம் அல்லது விலங்கின் செல்லின் இயற்கை யான மரபீனிக் கட்டமைப்பை சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம் விருப்பத்திற் கேற்ப மாற்றி அமைப்பது. அதாவது, சில பூச்சிகளை எதிர்க்கும் திறன் படைத்த, சில களைக்கொல்லிகளைத் தாங்கும் திறன்படைத்த தாவரங்களை உருவாக்குவது. அதிக புரதச் சத்து கொண்ட காய்கறிகள் தயாரிப்பு . மனிதகுல வரலாற் றில் முதன்முதலாக இயற்கை யான பரிணாம உருவாக்கத்தை தனது சுயநலனுக்காக மனிதர் கள் பயன்படுத்த முனைகின் றனர். உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மிகச் சிக்கலான மரபீனிக் கட்டமைப்பை மாற்றி தாவர, விலங்கு உருவாக்கம் செய்கின்றனர்.
எதிர்பாராதது: மிகச்சிக்க லானதான மரபீனிக் கட்டமைப் பை சிதைப்பததன் மூலம் நாம் எதிர்பார்க்கும் விளைவுதான் ஏற்படும் என்று உறுதியாகக் கூற இயலாது. ஏனென்றால் அதன் செயல்பாட்டை முற்றிலும் நாம் கட்டுப்படுத்த இயலாது. அது உத்தேசமாகவே செயல்படுகிறது. கணக்கு போல ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது இங்க பொருந்தாது. ஒன்றும் ஒன்றும் பதினொன்றாகவும் ஆகலாம். புதிதாக நுழைக்கப்பட்டுள்ள மரபீனியானது இயற்கையாகஉள்ள மரபீனியை தொந்தரவு செய்ய லாம். இதனால் பதற்றமான சூழல் உருவாகலாம். (இத்தகையதொரு பதற்றமே அணுக்கதிர்வீச்சுக்கு காரணம்). அல்லது நாம் எதிர்பாராத வேறொரு விளைவு உருவாகலாம். இதனால் ஒரு புதிய நச்சு உருவாகி ஒவ்வாமை யை ஏற்படுத்தலாம்.
திரும்ப இயலாது: இவ்வாறு மரபீனி மாற்றப்பட்ட பயிரினங் கள் அல்லது உயிரினங்கள் சூழலில் அனுமதிக்கப்படுவது என்பது சூழலுக்கும் உணவுச் சங்கிலிக்கும் அச்சுறுத்தலாகும். அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாக இந்த புதிய பயிரின் தன்மைகள் பிற பயிர்களுக்கும் பரவலாம். இதன்விளைவாக எதிர்காலத்தில் மரபீனி மாசுபாடும் உருவாகலாம். இதனால் ஏற்படும் சிக்கல்களை இப்போதே அளவிட்டுவிடமுடியாது.
இயற்கைக்கு மாறானது: இதனால் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. கோதுமையில் பசுவின் மரபணு இருக்கலாம், உருளைக்கிழங்கில் சிலந்தியின் மரபணு இருக்கலாம். இது இயற்கையில் எப்போதும் நடவாதவொரு விசயமாகும்.
மரபீனி மாற்ற தொழில்நுட்ப முறையில் எவ்விதமெல்லாம் உணவுப்பொருட்கள் உருவாக்கப் படுகின்றன என்பதைக் கேட்டால் நமக்கு தலைசுற்றும், நம்ப முடியாது. ஆனால் இவை எல்லாம் மிகதேவையானதாக பன்னாட்டு வணிக நிறுவனங்க ளால் முன் வைக்கப்படுகிறது. தக்காளியில் தண்ணீர் ஒட்டாம லும், ஊடுருவாமலும், அழுகாம லும் இருப்பதற்காக மீனின் மரபீனிகள் தக்காளியின் மரபீனி கட்டமைப்பில் செயற்கையாக புகுத்தப்படுகின்றன. தக்காளி கீழே விழுந்தால் சிதையாமலி ருக்க சிலவகை தக்காளிக்குள் கோழியின் காலிலுள்ள மரபீனிகள் புகுத்தப்படுகின்றன.
வணிகரீதியில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட உணவுப் பொருள் தக்காளியாகும். கால்ஜீன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட இதன் வணிகப்பெயர் திறீணீஸ்க்ஷீஷிணீஸ்க்ஷீ என்பதாகும். 1992ல் அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறையானது இது வெறும் தக்காளிதான், இதனால் உடல்நலனுக்கு ஆபத்து ஏதும் இல்லை. எனவே தனியான அறிவிப்பு வில்லை ஏதும் ஒட்டப்படவேண்டியதில்லை என்று அனுமதி கொடுத்தது. 1994 முதல் இது சந்தைக்கு வந்தது. நுகர்வோரிடையே பெரும் வரவேற்பும் பெற்றது.
வழக்கமான விலையைவிட 2 முதல் 3 மடங்கு அதிக விலை கொடுத்து இதனை மக்கள் வாங்கினர். என்றாலும் உற்பத்தி பிரச்சினைகள், விரைவில் அழுகுவது போன்றகாரணங்களால் இது நட்டமடைந்தது. அதோடு கால்ஜின் நிறுவனத்தை 1995ல் மான்சாண்டோ விலைக்கு வாங்கியது. 1996ல் இதே தக்காளி யின் மற்றொருவகை செனிகா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, அதிலிருந்து தக்காளி கூழ் தயாரிக்கப்பட்டது. அப்போது இதனை ஐரோப்பிய நுகர்வோர் ஏற்றுக்கொண்டனர். இந்நிலை பசுக்கிறுக்கு நோய் வரையிலும் நீண்டது. அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. அதன் பின்னரே மான்சாண்டோவின் ரவுண்டப்-ரெடி சோயா போன்ற தயாரிப்புகளுக்கு எதிராக ஐரோப்பிய மக்கள் அணிதிரண்டனர்.
ஒரு உணவுப்பொருளானது முழுமையாகவோ அல்லது அதில் கலந்துள்ள ஒரு பொருளோ - அதாவது மரபீனி மாற்றப்பட்ட தாவரம், விலங்கு அல்லது ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர்களைக் கொண்டதாக இருந்தால் அது மரபீனி மாற்றப்பட்ட உணவு என்ற சொல்லால் சுட்டப்படும். மரபீனி மாற்றப்பட்ட உணவு வகைகள் 1990கள் முதல் சந்தையில் கிடைத்துவருகின்றன. தற்போது மரபீனி மாற்றப்பட்ட சோயா பீன்ஸ், மக்காச்சோளம், கனோலா ஆகியவற்றால் தயாரிக் கப்பட்ட உணவுகள் சந்தையில் பரவலாகக் கிடைத்துவருகின்றன. அரசுகளைப் பொறுத்தவரையில் முற்றிலும் தடை, அடையாள வில்லை ஒட்டினால் போதும், வழக்கம்போல் விற்கலாம் என்ற மூன்றுவிதமான நிலைகள் காணப்படுகின்றன.
ஜப்பான் மற்றும் மேலை நாடுகளில் இத்தகைய மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர் வைககள் மிக கட்டுப்பாட்டிற்கும் கண்காணிப்பிற்கும் கீழே சோதனை ரீதியாக பயிரிடப் படுகின்றன. ஆனால் இந்தியா வில் மிக சுதந்திரமாக எவ்வித கட்டுப்பாடுகளும் அற்ற நிலையில் இவை பயிரிடப் படுகின்றன. இதனால் பிற சாதாரண பயிர் வகைகளோடு இவையும் கலந்து மிக கடுமையான சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் நமது இயற்கையான சுற்றுச்சூழல் இவ்வாறு மாசுப்படுத்தப் பட்டுவிட்டால் அதனை சரி செய்வது என்பது நடக்காத கதை.
இதனால் தான் அரியானா விலுள்ள ராம்புரா கிராமத்தில் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் இந்திய கூட்டாளியான மகிக்கோ நிறுவனத்தால் பயிரிடப்பட்டிருந்த மரபீனி மாற்ற நெற்பயிரை இந்திய உழவர் சங்கத்தை சேர்ந்த செயல்பாட்டாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதுபோலவே ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப் பட்டிருந்த மரபீனி மாற்ற நெற்பயிரை தமிழக உழவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பிடுங்கி அழித்தனர். ஆந்திரா விலும் இதுபோல உழவர்களின் போராட்டம் தீயிட்டு கொளுத்துமளவிற்கு தொடர்ந்தது.
மரபீனி மாற்ற உணவு வகைகளால் உடல்நலனுக்கு எவ்வித தீங்கும் இல்லையென்று உலகில் எப்பகுதிகளிலும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. அதேவேளை இதனால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற உடனடி நோய்கள், மற்றும் நீண்டகால பயன்பாட்டால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும் முடிவுகளும் அவ்வப்போது வெளிவந்து உலகை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இலாப வெறிப்பிடித்து அலையும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு மக்களின் உடல்நலனை குறித்து ஏது அக்கறை? அவர்களின் நோக்கம் எல்லாம் தம் பணப்பெட்டியை நிரப்புவதிலே இருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சித்தமருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளில் தோல்நோய் உள்ளிட்ட சிலவகை நோய்களுக்கும் சிலவகை மருந்துகளுக்கும் மீன், கோழி, பன்றி, மாடு முதலியவற்றின் இறைச்சிகளை உண்பது பத்தியமாக தடைச்செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இவற்றின் மரபீனிகளை பயன்படுத்தி புதிய சைவ உணவுகள் உருவாக்கப்படும்போது அவற்றை எவ்வாறு இனம்பிரித்து அறிவது? அவற்றால் ஏற்படும் உடல்நலக்கேடுகளுக்கு யார் பொறுப்பு இந்த புதிய வகை காய்கறிகளை உண்பவர்களை சைவம் என்று அழைப்பது வேடிக்கையாக இல்லையா?.
ஆக நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளைக்கூட பயன்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
உயிரியல் தொழில்நுட்பமானது இவ்வாறு பல வகைகளில் நம்மை பாதிக்கும் அதே வேளையில் மற்றொரு புறம் உயிரியல் திருட்டாகவும் வடிவெடுத்துள்ளது. நம் நாட்டின் மஞ்சள், வேம்பு, பாசுமதி அரிசி உள்ளவற்றிற்கு அன்னிய நிறுவனங்கள் காப்புறுதி பெற்றதையும், அதனை நாம் முறியடித்ததையும் அறிவோம். இன்று உலகம் தழுவிய அளவில் குறிப்பாக வளமான மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து பன்னாட்டு நிறுவனங்கள் உயிரியல் திருட்டில் ஈடுபடுகின்றன.
ஆக, இத்தகைய நவீன வடிவில் வரும் ஆபத்தான மரபீனித் தொழில்நுட்பம் போன்றவற்றை புறகணித்தவிட்டு, நம் பாரம்பரிய வேளாண் முறைகளை முன்னெடுத்து செல்வதே இன்றைய காலத்தின் தேவை.